நெகிறி மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம்

நெகிறி மாநில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம்

Copy of DSC00238

நவம்பர் 5, நெகிறி மாநிலத்திலுள்ள சில தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இடமாற்றம் கண்டிருப்பதை தொடர்ந்து துணை தலைமையாசிரியர்களில் சிலர் தலைமையாசிரியர்களாகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாக மாநில கல்வி இலாகா அறிவித்தது.

தேசியப்பள்ளி மற்றும் சீனப்பள்ளிகளிலும் இதேபோன்ற இடமாற்றமும், பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உறுதி கடிதத்தை, மாநில கல்வி இயக்குநர் டத்தோ ஹஜி கல்சோம் காலிட் நேற்று அவர்களுக்கு வழங்கினார். இதை மாநில கல்வி இலாகா உறுதிப்படுத்தியது.