நாம் விளக்க கூட்டம் : டத்தோ M.சரவணன்

நாம் விளக்க கூட்டம் : டத்தோ M.சரவணன்

NaamOct14_1

நாம் பேரியக்கத்தின் விளக்க கூட்டம் 14/10/2014 அன்று மாலை கோலாலம்பூரில் நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இதை அதிகாரபூர்வமாக நாம் பேரியக்கத்தில் தலைவரும் இளைஞர் மற்றும் விளையாடு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் துவக்கி வைத்து பேசினார்.

டத்தோ சரவணன் அவர்கள் பேசுகையில் 13/10/2014 அன்று சிலாங்கூர் மாநிலத்தை நேர்ந்த 3 பெண்கள் மற்றூம் 24 ஆண்களுக்கு நாம் சிலாங்கூர் நிலங்களை வாடைக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தர். இதுவரை 109 திட்டங்கள் பரிசோதனை முயற்சியில் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தீபாவளிக்கு பிறகு நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கவிருப்பதாக தெரிவித்தார்.

நாம் திட்டத்தின் கீழுள்ள தோட்டங்களில் பலருக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்த போவதாகவும் தெரிவித்தார். நான் தோட்டங்களில் வேலை செய்வோருக்கு 2000 வெள்ளி மாத சம்பளமாக வழங்கப்படும் எனவும் டத்தோ விழாவில் தெரிவித்தார்.

NaamOct14_2 NaamOct14_3 NaamOct14_4 NaamOct14_5