நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது எஸ்.பி.எம் தேர்வு

நவம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது எஸ்.பி.எம் தேர்வு

WTB

அக்டோபர் 31, இவ்வாண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு எதிர்வரும் நவம்பர் 3-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இவ்வாண்டு மொத்தம் 455,839 மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர். மொத்தம் 3655 மையங்களில் நடைபெறும் எஸ்.பி.எம் தேர்வை நாடளாவிய நிலையில் 29, 607 அதிகாரிகள் கண்காணிப்பர்.

தேர்வுக்கு அமரும் மாணவர்கள் தங்களின் தேர்வு அட்டவணையையும், கட்டளைகளையும் கவனமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தேர்வு குறித்த மேல்விபரங்களை மாணவர்கள் http://www.moe.gov.my/p என்ற அகப்பக்கத்தின் வழி பெறலாம்.