நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு 16-ந் தேதி கூடுகிறது

நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு 16-ந் தேதி கூடுகிறது

amma

அக்டோபர், 14 நடிகர் சங்கத்தின் அவசர சிறப்பு செயற்குழு கூட்டம் வருகிற 16–ந் தேதி நடக்கிறது. தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் செயற்குழு கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ராதா ரவி, துணைத் தலைவர்கள் விஜய்குமார், கே.என். காளை, பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

நடிகர்கள் ஸ்ரீகாந்த், சிம்பு, சார்லி, சின்னி ஜெயந்த், சந்தான பாரதி, மனோபாலா, குண்டு கல்யாணம், நடிகைகள் நளினி, சி.ஐ.டி.சகுந்தலா, குயிலி, சத்யபிரியா, சேலம் மேயர் சவுண்டப்பன், எஸ்.எஸ்.ஆர் கண்ணன், ரவிகுமார், கே.ஆர்.செல்வராஜ் உள்ளிட்ட 24 கமிட்டி உறுப்பினர்கள், 6 நியமன துணை உறுப்பினர்களும் செயற்குழுவில் கலந்து கொள்கின்றனர்.

தமிழ் படங்களில் நடிக்கும் புதுமுக நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தப்படுகிறது. ஆனாலும், பலர் உறுப்பினராகாமலேயே நடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இது குறித்து கூட்டத்தில் ஆலோசித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நடிகர் சங்கம் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.