தேசநிந்தனைச் சட்டத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது

தேசநிந்தனைச் சட்டத்தில் அமெரிக்கா தலையிடக்கூடாது

malaysianflag

அக்டோபர், 20 தேசநிந்தனை சட்டம் குறித்து மலேசியாவின் விவாதத்தில் அமெரிக்கா தலையிட கூடாது என வீட்டுவசதி நகர்ப்புற நல்வாழ்வு மற்றும் ஊராட்சித் துரை அமைச்சர் டத்தோ அப்துல் ரஹ்மான் டஹ்லான் கூறியிருக்கிறார்.

தேசநிந்தனை சட்டத்தை புத்ரா ஜெயா பயன்படுத்தும் விஷயத்தில் அமெரிக்கா தலையிடவும் கூடாது அது குறித்து கேள்வி எழுப்பவும் கூடாது என்றார் அவர்.

மலேசியா ஒர் ஆட்சியுரிமை பெற்ற நாடு. ஒரு பல இன நாட்டில் அமைதியை பராமரிக்க தேவையான சட்டங்களை இயற்ற அதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.