தெலுக் இந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

தெலுக் இந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.

1

தெலுக் இந்தானில் ஏற்பட்டிருக்கும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய நாள் காட்டிலும் இந்த எண்ணிக்கை  சற்று அதிகரித்திருப்பதாக நம்பப்படுகிறது. சுமார் 97 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 78 பேர் ஆண்கள், 103 பேர் பெண்கள் மற்றும் 71 பேர் குழந்தைகள் என பேராக் பொது தற்காப்புத்துறை மையத்தின் அதிகாரி முகமது பஃஸ்லி முகமது சமாவி தெரிவித்தார். மழை இல்லாத காரணத்தால் வெள்ளத்தின் நீர்மட்டம் தற்போது 3.44 மீட்டர் உயரம் வரை இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட இடங்கள் மீண்டும் கண்காணிப்பின் கீழ்  இருந்து வருவதாகவும் முகமது பஃஸ்லி கூறினார்.