தீவிரவாதிகள் மீண்டும் அட்டூழியம் நைஜீரியாவில் கிராம மக்கள் 30 பேர் பலி

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

டிசம்பர் 16, ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன், உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்கள் அங்கு பல்வேறு தீவிரவாத தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்து வருகின்றனர். நைஜீரியாவில் கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள சிறுமிகளையும் பெண்களையும் போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி வருகின்றனர். குறிப்பாக வடகிழக்கு பகுதியில் உள்ள நகரங்களும் கிராமங்களையும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் உள்ள 3 கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அப்பாவி கிராம மக்கள் 30 பேர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.