திரிஷா–வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடந்தது

திரிஷா–வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடந்தது

Engagement-Stills

ஜனவரி 23, திரிஷா 1999–ல் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002–ல் ‘மவுனம் பேசியதே’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, ஜெயம் ரவி, விஷால் என பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்தி படமொன்றிலும் நடித்தார்.

பத்து வருடங்களுக்கு மேல் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் திரிஷாவுக்கு திடீரென திருமணம் முடிவாகியுள்ளது. தயாரிப்பாளர் வருண்மணியனை மணக்கிறார். இவர் தமிழில் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ படங்களை தயாரித்துள்ளார். தொழில் அதிபராகவும் இருக்கிறார்.

திரிஷா–வருண்மணியன் திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள வருண் மணியன் வீட்டில் நடந்தது. இதில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர்.

திரிஷா மும்பை பேஷன் டிசைனர்களால் பிரத்யேகமாக டிசைன் செய்யப்பட்ட பட்டுச் சேலை அணிந்து இருந்தார். பின்னர் நிச்சயதார்த்த சடங்குகள் நடந்தன. திரிஷாவும், வருண்மணியனும் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். உறவினர்களுக்கு ருசியான விருந்தும் பரிமாறப்பட்டது.

நடிகர், நடிகைகளுக்கு திரிஷா நாளை நிச்சயதார்த்த விருந்து கொடுக்கிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிப்பாரா? என்று தெரியவில்லை.