திகில் படத்தில் டபுள் ஹீரோயின்

திகில் படத்தில் டபுள் ஹீரோயின்

Kolly

மருத்துவகல்லூரி மாணவர்கள் குறித்த கதை மண்டோதரி என்ற பெயரில் உருவாகிறது. இதில் டபுள் ஹீரோ, ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதுபற்றி இயக்குனர் ஆர்.சம்பத் கூறியது: மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஒருசிலரின் அஜாக்கிரதையால் உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுகின்றன. இதுபோல் கிராமத்து பெண் ஒருவருக்கு ஏற்படும் அசம்பாவித்தை சொல்லும் படமாகவும், இந்த சம்பவத்தால் மாணவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப்போடப்படுகிறது என்பதையும் மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.  திகில் படமாக உருவாகும் இதில் ரஞ்சித், அமர், தாரீனா, பிரியா நடிக்கின்றனர். 

இவர்களுடன் பாண்டு, பொன்னம்பலம், சம்பத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். டி.மகிபாலன் ஒளிப்பதிவு. பாலக்காடு, குமுளி, சேலம் போன்ற இடங்களில் ஷூட்டிங் நடக்கிறது. ஏ.தட்சணாமூர்த்தி தயாரிக்கிறார். இவ்வாறு இயக்குனர் ஆர்.சம்பத் கூறினார்.