தாய்மொழி கல்வி பள்ளிகளை மூடச்சொல்வது தவறு

தாய்மொழி கல்வி பள்ளிகளை மூடச்சொல்வது தவறு

s1

நவம்பர் 16,மலேசியாவில் உள்ள அனைத்து தாய் மொழிக்கல்வி பள்ளிகளையும் மூட வேண்டும் எனும் அம்னோ பேராளர்களின் பரிந்துரை ஒரு அத்துமீறிய, முறையற்ற செயல் என சபா மாநில துணை சபாநாயகர் டத்தோ ஸ்ரீ பங்லிமா டாக்டர் சாலே துன் சைட் கூறியுள்ளார்.

தாய் மொழிக்கல்வி பள்ளிகள் தேசிய கல்வி கட்டமைப்பில் ஒரு அங்கமாக உள்ளன. அந்த பள்ளிகளை மூட வேண்டும் என்பது அத்து மீறிய செயல், திவிரவாத சிந்தனையாகும் என அவர் கூறினார்.