தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கொடுத்துவிட்டேன்:சாமிவேலு

தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கொடுத்துவிட்டேன்:சாமிவேலு

samy-vellu2-220613_640_483_100

நவம்பர் 5, இங்கு தாமான் தீவி ஜெயாவில் புதிய தமிழ்ப்பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை கடந்தாண்டு 13-வது பொதுத்தேர்தலின் போது தொடங்கி வைத்தீர்கள். ஆனால் இதுநாள்வரையில் அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாயிற்று என்று முன்னாள் மஇகா தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவிடம் கேள்வி எழுப்பியபோது, அங்கு கட்டுவதற்கு நிலத்தை கல்வி அமைச்சகத்திடம் கொடுத்துவிட்டேன், ஆனால் அந்த அமைச்சகம் தான் அக்கறை காட்டவில்லை என்று கூறினார்.

அப்போது அங்கிருந்த ஆட்சிக்குழு உறுப்பினர் மாணிக்கத்தை நோக்கி, மாநில அரசுதான் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உடனிருந்த கல்வித் துணையமைச்சர் கமலநாதனை அதற்கான உதவிகளை செய்து தரும்படி கேட்டுகொண்டார். மாணிக்கம் இதுகுறித்து ஆவணங்கள் எதுவும் தம் கவனத்திற்குக்கொண்டு வரப்படாததால், தம்மால் உரிய நடவடிக்கை மேற்கொள்வதில் தை ஏற்பட்டுள்ளதாக கூறினார். டத்தோ ஸ்ரீ சாமிவேலு இதற்கான ஆவண நகல்களை தம்மிடம் வழங்கினால், தொடர் நடவடிக்கையை மேற்கொள்ளப் பெரும் உதவியாக இருக்கும் என்றார் அவர்.