தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

lankan

ஜூலை 23, மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்துள்ளனர். இதனால் மீனவர்கள் அனைவரும் வெறும் கைகளுடன் கரைக்கு திரும்பினர்.