டத்தோ M.சரவணன் செய்தியாளர் சந்திப்பு

டத்தோ M.சரவணன் செய்தியாளர் சந்திப்பு

sa7

ஜனவரி 29, கூட்டரசு பிரதேச ம இ கா மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டத்தோ M.சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். ம இ கா அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்று கூறினார். ம.இ.காவை காக்க தேர்தல் ஆணையம் சொன்னது போல புதிய தேர்தலை நடத்தி கட்சியை காகவேண்டும் என்று டத்தோ M.சரவணன் கூறினார். மேலும் தன்னை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிய கடிதத்தை குண்டர்கள்தான் என்னிடம் தந்தனார். ம இ கா தலைவர் டத்தோ பழனிவேல் நேற்று அனுப்பிய குறுஞ்செய்தியை எடுத்து காண்பித்தார் டத்தோ M.சரவணன். தன்னை பதவியில் இருந்து நீக்கிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது பழனிவேல் அல்ல அவரது வீட்டில் உள்ள எவரோ எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ம இ காவின் தலைவராக பழவிவேலை ம இ காவினர் தேர்ந்தெடுக்கவில்லையெனவும், பிரதமரின் வேண்டுதலுக்காகவே அவருக்கு அந்த பதவி வழங்கப்பட்டதாகவும் டத்தோ M.சரவணன் தெரிவித்தார்.
இன்னும் 24 மணி நேரத்தில் ம இ கா கூட்டத்தை கூட்டவில்லையெனில் நியாயம் வேண்டி ம இ காவினர் 2000 பேருடன் பழனிவேல் இல்லத்தின் முன் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாகவும் M. சரவணன் தெரிவித்தார்.