ஜொகூர் பாரு: மர்ம பொட்டலத்தில் வெடிகுண்டு இறுப்பதாக மக்கள் பீதி

ஜொகூர் பாரு: மர்ம பொட்டலத்தில் வெடிகுண்டு இறுப்பதாக மக்கள் பீதி

bomb

ஜனவரி 13, ஜொகூர் பாரு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக நம்பப்பட்ட மர்மமான பொட்டலம் ஒன்றால் ஜொகூர், ஜாலான் தெப்ராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இன்று மதியம் 1 மணி அளவில் ஜாலான் தெப்ராவில் அமைந்துள்ள பெட்ரோல் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மர்ம பொட்டலத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியது. இதனால் ஜாலான் தெப்ராவ், ஜாலான் அப்டுல்லா தாயிர் மற்றும் தாமான் பெலாங்கிச் செல்லும் பாதைகள் மூடப்பட்டன.
தகவல் கிடைத்து விரைந்து வந்த போலீஸ் படை மற்றும் வெடிகுண்டு மீட்புக் குழுவும் அப்பொட்டளத்தை ஆராய்ந்துப் பார்த்ததில் அது வெறும் பழைய பொருட்கள் அடங்கியப் பொட்டலம் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
வெடிகுண்டு இருப்பதாக் கிடைந்தத் தகவல் அனைத்தும் வெறும் வதந்தி என்பதனையும் போலீசார் உறுதிப்படுத்தினர். இதனால் மக்கள் பயப்படுவதற்கு எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.