ஜெயலலிதா விடுதலை: சபரிமலைக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய பி.ஆர்.சுந்தரம் எம்.பி.

ஜெயலலிதா விடுதலை: சபரிமலைக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய பி.ஆர்.சுந்தரம் எம்.பி.

jaya

அக்டோபர், 20 அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்பதற்காக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத் தலைவருமான பி.ஆர்.சுந்தரம் எம்.பி. சபரிமலை அய்யப்பன் சுவாமிக்கு வேண்டுதல் வைத்திருந்தார்.

தற்போது ஜெயலலிதா ஜாமினில் விடுதலை ஆனதையொட்டி அவரது கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதையொட்டி வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக பி.ஆர்.சுந்தரம் எம்.பி. விரதம் இருந்து இருமுடி கட்டி சபரி மலைக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சபரி மலைக்கு அங்குள்ள பம்பையில் இருந்து நடந்தே சென்றார். கோவிலில் 18–ம் படி ஏறி வழிபாடு செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்.