செங்கோட்டையில் பீடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் பீடித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

4

 

சம்பள உயர்வு குறித்த தமிழக அரசின் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பீடிக் கம்பெனிகள் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்ளாத பீடிக் கம்பெனிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் சிஐடியு பீடித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஆறுமுகம் தலைமை வகித்தார். பீடித் தொழிலாளர்  சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எம்.வேல்முருகன் , சிஐடியு செங்கோட்டை தாலுகா தலைவர் டி.வன்னியபெருமாள், பொருளாளர் ரயில்வே முத்துசாமி, தென்காசி தாலுகாச் செயலாளர் லெனின்குமார் ஆகியோர் பேசினர். தாலுகா மற்றும் வட்டார நிர்வாகிகள் இஸ்மாயில், சீனிவாசன்,கணபதி, முருகேசன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.