சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும்

சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தை காப்பாற்ற வேண்டும்

5851619998_cd549303bd_o

அக்டோபர் 31, பிரிக்பீல்ட்சில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா ஆசிரமத்தின் மறுசீரமைப்பு பணியை நிறுத்தச் சொல்லி ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தி தேசிய புராதன அமைப்பிற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 வருடங்கள் பழமை வாய்ந்த இந்த புராதன கட்டிடத்தைக் காப்பாற்ற கட்டாயம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேதமூர்த்தி அவரது கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.
2004-ஆம் ஆண்டில் பாரம்பரிய கட்டிடமாக வகைப்படுத்தப்பட்ட இந்த விவேகானந்தா ஆசிரமம், இந்தியர்களின் கலாச்சரத்தை பிரதிபலிக்கும் அம்சமாக உள்ளது என்பதையும் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.