சிவராஜ் சந்திரன் நோன்பு பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்

சிவராஜ் சந்திரன் நோன்பு பெருநாள் வாழ்த்துகள் தெரிவித்தார்

HariRayaSivarraajh

 

மலேசிய திருநாட்டில் நோன்பு பெருநாள் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் சகோதரர் சகோதரிகளுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவின் சார்பில் எங்களது இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு மாதம் நோன்பிருந்து, உடல் உள்ளம் அனைத்தும் புதுப்பித்து ஒரு புது மனிதராக மீண்டும் பிறப்பெடுத்து நமது முஸ்லீம் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது வாழ்த்துகள். அறிவியல்பூர்வமாக பார்த்தால் இந்த ஒரு மாத நோன்பு உங்கள் உடல் உற்ப்புகளை சுத்தம் செய்யவும் உதவுகின்றது. ஆக ஆன்மீக ரீதியிலும் அறிவியல் ரீதியிலும் இந்த நோன்பு நமது முஸ்லிம் நண்பர்களுக்கு நன்மையே வழங்கியுள்ளது.

இவ்வருட நோன்பு பெருநாள், நம் நாடு MH370 தொடர்பில் ஒரு முன்னேற்றம் கிடைக்காமலும், அதை விட கடந்த வாரம் 298 பயணிகளை இழந்த நமது நாட்டி MH17 விமானம் இன்னும் பேரிடியாக இறங்கிய நேரத்திலும் அமைந்துள்ளது. மிகவும் துக்கத்தை சுமந்து இத்திருநாளை நாம் கொண்டாட இருக்கின்றோம். இந்நாளில் MH17 விபத்தில் உயிர் இழந்த நமது சக மலேசியர்களுக்கு மட்டுமின்றி உயிர் இழந்த அனைத்து பயணிகளின் ஆத்மா சாந்தி அடையவும், MH370 நிலைக் குறித்து கூடிய விரைவில் நமக்கு நல்ல தகவல்கள் வர வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் ஒன்றுகூடி வேண்டுவோம்.

மீண்டும் அனைவருக்கும் எங்களது செலமாட் ஹரிராயா. உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் அனைத்து செல்வங்களும் அருள இந்த நாளில் நான் இறைவனை வேண்டுகிறேன். வாகனத்தை செலுத்தும்போது கவனமாக் செலுத்துங்கள். நன்றி.

இவ்வாறு  தேசிய ம இ கா இளைஞர் பிரிவின் நோன்பு பெருநாள் வாழ்த்துகள் பத்திரிக்கைச் செய்தியில் ம இ கா இளைஞர் பிரிவு தேசியத் தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.