சிரம்பானில் ஜ.பி.எப் தீபாவளி-கிறிஸ்மஸ் இன்னிசை இரவு

சிரம்பானில் ஜ.பி.எப் தீபாவளி-கிறிஸ்மஸ் இன்னிசை இரவு

deepavali

நவம்பர் 27,ஜ.பி.எப் நெகிறி மாநிலம் ஆதரவுடன் அதன் மாநில மகளிர் பிரிவு மற்றும் சிரம்பான் கரு இந்தியக் குழந்தைகளின் பராமரிப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அன்பு இல்லக் குழந்தைகளுடன் ஜ.பி.எப் தீபாவளி-கிறிஸ்மஸ் இன்னிசை இரவு குதூகல நிகழ்வு வரும் 29.11.2014 சனிக்கிழமை இரவு 7.30மணிக்கு லோபாக் தமிழ்ப்பள்ளியில் நடைபெறவுள்ளது என்று அதன் ஏற்பாட்டுக்குழுத் தலைவர் கரு.கண்ணகி நாதன் கூறினார்.

அன்றை தினம் பகல் 2மணி தொடங்கி மாலை 6மணி வரை அன்பு இல்ல குழந்தைகளுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக கூறிய அவர் நெகிரி வாழ் பொதுமக்கள் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறும், ஆதரவற்ற குழந்தைகளை நமது குழந்தைகளாக அவர்களை சந்தோசப்படுத்தி உற்சாகமூட்ட இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என்று கேட்டுக்கொண்டார் சிறப்பு வருகையாளராக ஜ.பி.எப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ மா.சம்பந்தன் அவரின் துணைவியார் டத்தின் ஜெயலட்சுமி அகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

தொடர்புக்கு:கண்ணகி 016-6684002, நாதன்: 012-3669295, கண்ணா 018-3231714.