சான்றிதழ் நகல் விண்ணப்பிக்க சிறப்பு மூகம்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 15, சென்னையில் இந்த மாதம் 1 மற்றும் 2ஆம் தேதி கொட்டித்தீர்த்த கனமழையால் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் இழந்துள்ள நிலம், வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை அனைந்து அடையாள அட்டை ஆவணங்களின் நகல் சான்றிதழ்கள் அவர்களுக்கு கட்டணமின்றி வழங்க சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நேற்று முதல் வரும் 28/12/2015 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இதில் நேற்று மட்டும் 5620 பேர் சான்றிதழ் நகல் கோரி விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.