குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது

குழந்தைகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது

Death

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரத்தில், தனது 4 குழந்தைகள் உள்பட 6 பேரை சுட்டுக்கொன்றதாக ஒரு நபரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

“ஹூஸ்டன் நகரத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும், அவரது மனைவியும் பிரிந்து வாழ்கின்றனர்.

கணவன், மனைவி பிரிவின் காரணமாக அவர்களது குடும்பத்துக்குள் உள்ள பிரச்னைகளே இந்த சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம்’ என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள், 7 மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள், 39 வயது ஆண் மற்றும் 33 வயது பெண் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

அதையடுத்து, அந்த நபரை போலீஸார் துரத்திச் சென்றனர். சுமார் 3 மணி நேர போராட்டத்துக்குப் பின் சுற்றிவளைக்கப்பட்ட அந்த நபர், பிறகு சரணடைந்தார்.