குத்தாட்டம் ஆட 1 கோடி சம்பளம் கேட்டாராம்: அஞ்சலி

குத்தாட்டம் ஆட 1 கோடி சம்பளம் கேட்டாராம்: அஞ்சலி

Anjali

ஜனவரி 24, நடிகை அஞ்சலி தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக ‘அப்பாடக்கரு’, விமல் ஜோடியாக ‘மாப்ளசிங்கம்’ படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட மொழியிலும் தலா ஒரு படத்தில் நடிக்கிறார்.

சித்தி தகராறு, டைரக்டருடன் மோதல் என்றெல்லாம் சர்ச்சைகளில் சிக்கி சில மாதங்கள் ஒதுங்கி இருந்து விட்டு தற்போது மீண்டும் இப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளதால் சம்பளத்தையும் உயர்த்தி இருக்கிறார். இந்த நிலையில் தெலுங்கில் ராம்சரண் நாயகனாக நடிக்கும் படத்தில் அஞ்சலியை ஒரு குத்தாட்டம் ஆட வைக்க படக்குழுவினர் விரும்பினர்.

இதற்காக அஞ்சலியை அணுகி பேசினார்கள். அப்போது குத்தாட்டம் ஆட அவர் ரூ.1 கோடி சம்பளம் கேட்டாராம். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒரு பாட்டுக்கு இவ்வளவு தொகை அதிகம், கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்கள். அஞ்சலி சம்மதிக்கவில்லை. ரூ.1 கோடி கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? வேண்டாமா? என்று படக்குழுவினர் யோசிக்கிறார்கள்.

குத்தாட்டத்துக்கு அதிக தொகை வாங்கிய நடிகைகள் பட்டியலில் இதுவரை தமன்னா இருந்தார். ‘அல்லுருசீனு’ என்ற தெலுங்கு படத்தில் ஆட ரூ.50 லட்சம் வாங்கினார். அஞ்சலிக்கு ரூ.1கோடி கொடுத்தால் தமன்னா சாதனையை முறியடித்த பெயர் கிடைக்கும்.