கிளர்ச்சியாளர்கலுடன் பேச்சு வார்த்தை: பிரதமருக்கு அன்வார் ஆதரவு

கிளர்ச்சியாளர்கலுடன் பேச்சு வார்த்தை: பிரதமருக்கு அன்வார் ஆதரவு

art

கோலாலம்பூர், 23 ஜூலை- MH17 விமான விபத்து தொடர்பாக பலியானவர்கள் மீதான அக்கறையைக் கருத்தில் கொண்டு பிரிவினைவாதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

“பிரதமர் பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது சர்ச்சையைக் கிளப்பினாலும், அக்கோர விபத்தில் பலியானவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர் எடுத்த அம்முடிவுக்குத் தாம் ஆதரவு தெரிவிப்பதாக இன்று மக்களவையில் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு தெரிவித்தார்.