காஷ்மீரில் துப்பாக்கி சூடு- 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீரில் துப்பாக்கி சூடு- 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.

3

காஷ்மீரின் எல்லைப்பகுதியில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையை ஒட்டி அமைந்துள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள குப்வாரா, லோலாப், ஹாந்திராவாரா, லான்கேட் உள்ளிட்ட 5 சட்ட சபை தொகுதிகளில் 2வது கட்ட  வாக்குப்பதிவு நடைபெற்றது.செவ்வாயன்று காலை நவ்காம் பகுதியின் அடர்ந்த காட்டுப்பகுதி வழியாக தேர்தலை சீர்குலைக்கும் சதித்திட்டத்துடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து தீவிரவாதிகளின் ஒரு குழுவினர் ஊடுருவ முயன்றனர்.இதனால் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 3 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.