கமலுடன் தண்ணீருக்கு அடியில் சரசம்-பூஜா குமார் பூரிப்பு

கமலுடன் தண்ணீருக்கு அடியில் சரசம்-பூஜா குமார் பூரிப்பு

kamal-haasan

சென்னை:கமலுடன் தண்ணீருக்கு அடியில் சாகசமும், சரசமும் பற்றி பூரிப்புடன் கூறினார் பூஜா குமார்.காதல் ரோஜாவே என்ற படம் மூலம் 10 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர் பூஜா குமார். அதன்பிறகு காணாமல் போனார். இந்நிலையில் விஸ்வரூபம் படம் மூலம் அவருக்கு ரீ என்ட்ரி வாய்ப்பளித்தார் கமல். இதையடுத்து விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படத்திலும் வாய்ப்பளித்தார். இதுபற்றி பூஜா குமார் கூறியது:விஸ்வரூபம் 2 படத்தில் எதிர்பார்க்காத அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள், ஸ்பெஷல் எபக்ட்ஸ் இருக்கிறது. அத்துடன் திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையும் உள்ளது. இப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படப்போகிறார்கள். இதில் நடித்தது எனக்கு பெருமை. தண்ணீருக்கு அடியில் கமலுடன் நடத்தும் சாகச காட்சிகள் மற்றும் சரச காட்சிகளில் நான் நடித்தது மறக்க முடியாதது. இதுவும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.