ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்குப் பிறப்பு பத்திரம் கிடைக்க உதவியது: மஇகா

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்குப் பிறப்பு பத்திரம் கிடைக்க உதவியது: மஇகா

big-mic

நவம்பர் 19,கம்போங் பாசீரில் வசித்துவரும் திருமதி சிவசத்தி மற்றும் 3 பிள்ளைகளான ந.லோகேஸ்வரி, ந.புகனேஸ்வரி மற்றும் ந.ஆறுமுகம் ஆகியோருக்கு பிறப்பு பத்திரம் இல்லாத காரணத்தினால் அப்பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கிவந்தார்.

திருமணமான புதிதில் செகமாட்டில் வசித்து வந்த சிவசக்தி, பின்னர் ரெம்பாவ், பெடாசில் வசித்துவந்தார். தற்போது ரந்தாவ், கம்போங் பாசீரில் முடியேறியுள்ள இவரின் பிரச்னை ம.இ.காவின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்டதைதொடர்ந்து ம.இ.கா பண்டார் ஸ்பிரிங்ஹில் கிளைதலைவர் ராஜ், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதன் பயனாக தாய் மற்றும் 3 பிள்ளைகளுக்கு தேசிய பதிவு இலாகா பிறப்புப்பத்திரம் வழங்கியது. கிளைத்தலைவர் ராஜீவிடன், ம.இ.கா. ரெம்பாவ் தொகுதி தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், ம.இ.கா தெலுக்கெமாங் தொகுதித்தலைவர் லெட்சுமணன் அகியோருக்கு சிவசக்தி ந்ன்றியை தெரிவித்துக்கொண்டார்.