இஸ்ரேல் குண்டுவீச்சில் 44 பாலஸ்தீனியர் பலி

இஸ்ரேல் குண்டுவீச்சில் 44 பாலஸ்தீனியர் பலி

blast

ஜெருசலம்: கடந்த வாரம் இஸ்ரேலிய சிறுவர்கள் மூன்று பேர், பாலஸ்தீன, ‘ஹமாஸ்’ பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டதை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே துவங்கிய மோதல், பெரிய தாக்குதலாக உருவெடுத்துள்ளது.ஹமாஸ் பயங்கரவாதிகள் வசம் உள்ள இடங்கள் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், நேற்று, குழந்தைகள், பெண்கள் உட்பட, 17 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை, 44 ஆக அதிகரித்துள்ளது.இருதரப்பினருக்கும் இடையே, 2012ல் நடைபெற்ற பெரிய மோதலின் போது கூட இல்லாத வகையில், கடந்த சில நாட்களாக, பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் கட்டுப்பாட்டு பகுதிகளில், நூற்றுக்கும் மேற்பட்ட குண்டுகளை இஸ்ரேல் விமானங்கள் வீசியுள்ளன.