இலங்கையில் சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்

இலங்கையில் சிறுமியை பலாத்காரம் செய்த சிங்கள கடற்படை வீரர்

Zimbabw

இலங்கையில் விடுதலைப்புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழர் பகுதி முழுவதும் ஆங்காங்கே சிங்கள படைகள் முகாமிட்டுள்ளன.

அவர்கள் தமிழர்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களை கொடுத்து வருகிறார்கள். பெண்களை கற்பழிப்பது, பாலியல் தொல்லை போன்ற சம்பங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த நிலையில் யாழ்பாணம் பகுதியில் சிங்கள கடற்படை வீரர் ஒருவர் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தை அடுத்த காரைநகர் அருகே உள்ளது ஊரியான் என்ற கிராமம். இந்த ஊரில் கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே பள்ளிக்கூடமும் உள்ளது.

அந்த ஊரைச்சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் கடற்படை முகாமை தாண்டி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது கடற்படை வீரர் ஒருவர் சிறுமியை காட்டு பகுதிக்கு கடத்தி சென்று கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதில் ரத்தபோக்கு ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறினார்.

இச்சம்பவம் நடந்ததுமே கடற்படை வீரர்கள் சிலர் சிறுமியின் வீட்டிற்கு சென்று பெற்றோரை மிரட்டினார்கள். இந்த சம்பவம் பற்றி புகார் கொடுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று எச்சரித்தார்கள்.

ஆனால் அதையும் மீறி சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்ப்பாணம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி அறிந்ததும் வடக்கு மாகாண தேசிய கூட்டமைப்பு கட்சி எம்.எல்.ஏ. சிவா சிறுமியின் வீட்டிற்கு சென்று நடந்த விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

சிங்கள வீரரால் தமிழ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.