இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை

இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை

death

ஜனவரி 20, 27 வயது நிறம்பிய ஆடவரைக் கொலைச் செய்ததன் பேரில் இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு தூக்குத் தண்டனை காத்திருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி பண்டார் பாரு மெர்லிமாவில் 27 வயதுடைய முஹமட் அச்சாட் சுஹானியை கொலைச் செய்ததால் நூர் ஃப்பதியா சகிரா மற்றும் அவரது நண்பர் பிர்டாவுஸ் அஹ்மாட் கரிம் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை தீர்ப்பளிக்கப்படவுள்ளது.
நேற்று நடந்த தீர்ப்பின் போது குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் இருவரும் மௌனம் சாதித்ததால் அடுத்த தீர்ப்பில் இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என நம்பப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்ட இந்த இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 19 வயது தான் என்பது குறிப்பிடத்தக்கது.