இரவு கேளிக்கை மையங்களில் இருந்து 36 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

இரவு கேளிக்கை மையங்களில் இருந்து 36 அந்நிய நாட்டுப் பெண்கள் கைது

fret10

அக்டோபர், 24 நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரம் சிரம்பான்னில் இரவு கேளிக்கை மையங்களில் பல்வேறு குற்றங்களைப் புரிந்த 36 அந்நிய நாட்டுப் பெண்களைக் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 பேர் சீன நாட்டவர்களாவர், மற்றவர்கள் வியட்னாமிய பெண்கள்.

இவர்கள் அனைவரும் 18 வயது முதல் 36 வயது மதிக்கத்தக்கவர்கள் என மாநில குடிநுழைவுத் துறை அதிகாரி ஃபாய்சால் ஃபாஸ்ரி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் குடிநுழைவு சட்டத்தின் படி, இந்நாட்டில் வேலை செய்வதற்கான அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் பேரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.