இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படுகிறது MH17 விசாரணை அறிக்கை

இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படுகிறது MH17 விசாரணை அறிக்கை

mh17

MH17 விமானப் பேரிடர் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை நெதர்லாந்தில் வெளியிடப்படும்.

நெதர்லாந்து விசாரணைக் குழுவினர் இன்று மாலை 4 மணிக்கு www.safetyboard.nl (OVV) அகப்பக்கத்தில் அந்த MH17 விசாரணை அறிக்கையை வெளியிடும்.

ஜூலை 17-ஆம் தேதி, நெதர்லாந்திலிருந்து கோலாலம்பூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த MH17 விமானம் கிழக்கு உக்ரைன் வான்வெளியில் வந்துக்கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இச்சம்பவத்தில் பலியான 298 பயணிகளில் 193 பேர் நெதர்லாந்து நாட்டவர்களாவர்.

இவ்விவகாரத்தில் உக்ரைன், ரஷ்யாவையும், ரஷ்யா உக்ரைனையும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.