இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் மூழ்கி விபத்து

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான கப்பல் மூழ்கி விபத்து

visag

நவம்பர் 7,ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகம் அருகே கப்பற்படைக்கு சொந்தமான மீட்பு கப்பல் ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். அந்த கப்பலில் இருந்து 4 பேரை தேடும் பணி தீவிரப்படுதப்பட்டுள்ளது. கடந்த 1983-ம் ஆண்டு கப்பற்படையில் இணைக்கப்பட்ட டிஆர்வி கப்பல் மீட்பு பணிக்களுக்காக அதிநவீன வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது. கப்பல் விசாகப்பட்டனத்தின் தெற்கே 30 கடல் மைல் தொலைவில் நிறுதப்பட்டிருந்தது.

கப்பலின் ஒரு பகுதியில் தண்ணீர் புகுந்தது பின்னர் கப்பல் முழுவதும் நீரில் மூழ்கத் தொடங்கியது. இந்த விபத்தில் மாலுமி ஒருவர் பலியானார். மேலும் காணாமல் போன 4 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.