இந்தியாவில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ-தொய்பா திட்டம்

Tamil News Malaysia

Tamil News Malaysia

டிசம்பர் 30, இந்தியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைக்க பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் 20பேர் எல்லைப்புற வழியாக நுழைந்து உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில அரசுகளை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டு உள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோவா போன்ற பெரிய நகரங்களில் பொதுமக்கள் கூடும், ரெயில், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்களிலும் கூடுதல் படையினரை பாதுகாப்புக்காக நிறுத்தும்படியும் உளவுத்துறை கேட்டுக்கொண்டு உள்ளது.