ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் 90 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் கார் குண்டு தாக்குதல் 90 பேர் பலி

Bagererhdad

காபூல்: ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள, பக்திகா மாகாணத்தில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள, மசூதி மற்றும் மார்க்கெட் அருகே, ஏராளமான வெடிகுண்டுகளை காரில் ஏற்றி வந்த பயங்கரவாதிகள், காரை வெடிக்கச் செய்து நிகழ்த்திய, தற்கொலைப் படை தாக்குதலில், 90 பேர் உயிரிழிந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சமீபத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில், நேற்று தான் அதிகமானோர் இறந்ததாகவும், இந்த தாக்குதலுக்கு, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும், ஆப்கன் தகவல்கள் தெரிவிக்கின்றன.