அம்பாங்: இரயில் கட்டுமானப் பணியால் சில சாலைகள் மூடப்படவுள்ளன

அம்பாங்: இரயில் கட்டுமானப் பணியால் சில சாலைகள் மூடப்படவுள்ளன

road

ஜனவரி 14, அம்பாங் இலகு இரயில் கட்டுமானப் பணியால் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி சில சாலைகள் மூடப்படவுள்ளன.
சாலை நெரிச்சல் அதிகமாக உள்ள தலைநகரில் மக்களின் போக்குவரத்தை இலகுவாக்க அரசாங்கம் ஆங்காங்கே இலகு இரயில் சேவையினை மேம்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது அம்பாங் செல்லும் பாதையிலும் இலகு இரயில் சேவைக்கானக் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றனர். இன்னும் சில தினங்களில் மிக கடுமையான வேலைகள் தொடங்கவுள்ளதால் மக்களின் பாதுகாப்புக் கருதி சில சாலைகள் மூடப்படவுள்ளன.
இதில் எதிர்வரும் ஜனவரி 15 தொடங்கி ஜனவரி 30 வரை பண்டார் பூச்சொங் ஜெயா தொடங்கி பண்டார் சன்வே மற்றும் பழைய கிள்ளான் சாலைகள் தர்காலிகமாக மூடப்படவுள்ளன. இரவு மணி 12 தொடங்கி அதிகாலை மணி 6 வரை இச்சாலைகள் அனைத்தும் மூடப்படும்.
இச்சாலைகளைப் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் வேறு பாதுகாப்பான பாதைகளைப் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மேல் விபரங்கள் பெற 03-78852585 எனும் எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.