அன்வர் இப்ராஹிம் மக்களை குழப்பக் கூடாது: டத்தோ முகமது முனிர் பானி

அன்வர் இப்ராஹிம் மக்களை குழப்பக் கூடாது: டத்தோ முகமது முனிர் பானி

1

சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னனி நிர்வகித்தபோது, மந்திரி பெசார் பதவிக்கு நாட்டின் பிரதமர் பலரது பெயர்களை பரிந்துரைப்பார். பின்னர் அதிலிருந்து  தகுதியான ஒருவர் அப்பதவிக்கு நியமிப்பதே வழக்கமாக இருந்தது. ஆனால் சுதந்திரம் பெற்றது முதல் பின்பற்றப்படும் நடைமுறையின்படியே சிலாங்கூர் மந்திரி  பெசார் பதவிக்கு ஒரு பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக அன்வார் இப்ராஹிம் கூறியுள்ள தகவல் சரியல்ல என சிலாங்கூர் அரண்மனை அறிவுறுத்தி உள்ளது. எனவே தாம்  வெளியிடுவது சரியான தகவல்தான் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் உறுதி செய்ய வேண்டும் என சுல்தானின் தனிச் செயலாளர் டத்தோ முகமது முனிர் பானி வலியுறுத்தியுள்ளார்.