சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

சுதந்திர தினவிழா இந்தியா முழுவதும் பாதுகாப்பு தீவிரம்

india

ஆகஸ்டு 13, இந்தியா முழுவதும் 69-வது சுதந்திர தினவிழா வரும் சனிக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுப்பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். தமிழகத்திலும் சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் தீவிரவாதிகள் தாக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றி வைப்பார்.