என் தமிழ்

ஜொகூர் பாருவில் சர்வதேச மார்ச்சிங் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் : 4 நாடுகளைச் சேர்ந்த 1,300 பேர் பங்கேற்பு

ஜொகூர் பாரு, 26 ஜூலை 2026 : மலேசிய சர்வதேச மார்ச்சிங் ஆர்ட்ஸ் சாம்பியன்ஷிப் (MIMAC) – ஜொகூர் பாரு மேயர் கோப்பை 2026 போட்டி, ஜூலை 23 முதல் 25 வரை ஜொகூர் பாருவிலுள்ள அரீனா லார்கின் அரங்கில் கோலாகலமாக நடைபெறுகிறது.

ஜொகூர் பாரு மாநகராட்சி (MBJB), ஜொகூர் சுற்றுலாத்துறை மற்றும் மலேசிய மார்ச்சிங் ஆர்ட்ஸ் சங்கம் (MAMA) இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில், தென் கொரியா, இந்தியா, இலங்கை மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளின் அணிகளுடன், மலேசிய தீபகற்பத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 29 சிறந்த அணிகளும் பங்கேற்கின்றன.

மொத்தம் 33 அணிகளைச் சேர்ந்த சுமார் 1,300 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச போட்டி, பல்வேறு நாடுகளின் கலை, கலாசாரம் மற்றும் திறமைகளை ஒரே மேடையில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

சர்வதேச அளவிலான இந்த மார்ச்சிங் ஆர்ட்ஸ் போட்டி, கலை மற்றும் கலாசார பரிமாற்றத்தை ஊக்குவிப்பதுடன், ஜொகூர் பாருவை சர்வதேச நிகழ்வுகளுக்கான முக்கிய மையமாக மேலும் உயர்த்தும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top