இதுவரை 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை

இதுவரை 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை

abdul-kalam-7591

ஆகஸ்டு 1, அப்துல்கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது தடுப்புகள் அமைத்து தேசியக்கொடி நட்டு வைக்கப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.  2 நாட்களில் சுமார் 7 லட்சம் பேர் அப்துல்கலாமுக்கு மரியாதை செலுத்தி உள்ளதாக உளவுத்துறையினர் தெரிவித்தனர்.