விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக

Lord_ganesha

ஜூலை 27, வரும் செப்டம்பர் 17ம் தேதி  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கு 5அடி, 10அடி மற்றும் 15அடி வடிவில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. அனைவரையும் எளிதில் கவரும் வகையிலும் சிலைகளை வடிவமைத்துள்ளனர். கடந்த ஆண்டை விட கூடுதலாக விநாயகர் சிலைகள் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக சிலை வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். கோவை செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதியில் பிரமாண்ட வடிவிலான சிலைகள் தயாரிக்கும் பணிகள் தற்போது வேகமாக நடந்து  வருகிறது.