காதலில் சிக்கினார் நயன்தாரா

காதலில் சிக்கினார் நயன்தாரா

nayanthara4

மே 14, நயன்தாரா, ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தார். முதலாவதாக சிம்புடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர். ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

அதன் பிறகு டைரக்டர் பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார்கள். இதற்காக பிரபு தேவா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் பிரபுதேவாவுக்காக கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். இந்த காதலும் முறிந்து விட்டது. இருவரும் பிரிந்தனர்.

டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் திடீர் நெருக்கம் எற்பட்டுள்ளதாக பட உலகில் கிசுகிசுக்கப்படுகிறது. ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.