தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்றார் விஜயகாந்த்

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் டெல்லி சென்றார் விஜயகாந்த்

Vijayakanth

ஏப்ரல் 27, காவிரியின் குறுக்கே அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முறையிட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகள் டெல்லி புறப்பட்டு சென்றனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கூடாது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசிடம் விஜயகாந்த் முறையிட உள்ளார்.

திமுக சார்பில் அக்கட்சியின் எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா, பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு செயலாளர் மோகன் ராஜீலு, விடுதலை சிறுத்தை சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், த.மா.க. சார்பில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் சார்பில் மாநில பொருளாளர் நாகை. ராமசந்திரன், மதிமுக சார்பில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் பிரதமரை சந்திக்கும் குழுவில் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.