வாலிபரை கடித்து குதறிய கரடி

வாலிபரை கடித்து குதறிய கரடி

images (14)

ஏப்ரல் 17, குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி மிஷின் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ஷீலன். இவரது தம்பி ஜெகன். இவர்கள் தாணிமுத்துவிளையில் உள்ள முந்திரி தோப்புக்கு நேற்று சென்றனர். அப்போது, ஷீலன் அருகே குட்டியுடன் ஒரு கரடி வந்தது. திடீரென தாய் கரடி ஷீலன் மீது பாய்ந்து தாக்கியது. உடனே அவர் அலறினாா். அவரது சத்தத்தை கேட்டு ஜெகன் ஓடி வந்து கையில் வைத்திருந்த அரிவாள், கற்களை எடுத்து வீசினாா். இதனால் பயந்துபோன கரடி குட்டியுடன் அங்கிருந்து ஓட்்டம் பிடித்தது. காயமடைந்த ஷீலன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.