அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்கிறது ரஷ்யா

அதிநவீன ஏவுகணையை சீனாவுக்கு விற்கிறது ரஷ்யா

china

ஏப்ரல் 17, திபெத் போன்ற உயரமான மலைப் பகுதிகளிலும் சீன ராணுவம் வான் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது. இதை மேலும் வலுப்படுத்த, ரஷ்யாவிடமிருந்து அதி நவீன எஸ்400 வான் பாதுகாப்பு கருவிகளை சீனா வாங்குகிறது. இதில் பயன்படுத்தப்படும் 40என்6 ஏவுகணை தரையிலிருந்து, விண்ணுக்கு விநாடிக்கு 4.8 கி.மீ வேகத்தில் 400 கி.மீ தூரம் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இதன் மூலம் எதிரி நாட்டு விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை தகர்க்க முடியும். இந்த எஸ்400 வான் பாதுகாப்பு கருவிகள் மூலம் 3விதமான ஏவுகணைகளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 36 இலக்குகளை தாக்க முடியும். இதன் மூலம் 3 அடுக்கு வான் பாதுகாப்பை சீன ராணுவத்தால் ஏற்படுத்த முடியும்.