ஆதார் எண் இருந்தால் மட்டுமே அரசு உதவித்தொகை

ஆதார் எண் இருந்தால் மட்டுமே அரசு உதவித்தொகை

aathar

மார்ச் 12, முதியோர், விதவை உள்ளிட்டோர் அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கு ஆதார் எண்ணை வரும் 20ம் தேதிக்குள் கண்டிப்பாக பதிவுசெய்யவேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஆதார் அட்டை உள்ளவர்கள் அதற்கான நகல், உதவித் தொகை உத்தரவு நகல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறும் அனைத்து பயனாளிகளும் தங்கள் ஆதார் எண்ணை கண்டிப்பாக வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும். பதிவு செய்த பயனாளிகளுக்கு மட்டுமே இனி வரும் காலங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என மதுரை கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.