இந்தியாவிடம் தோற்றதால் டிவிகளை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியாவிடம் தோற்றதால் டிவிகளை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்

India-vs-Pakistan

பிப்ரவரி 17, உலக கோப்பையில் 6வது முறையாக இந்தியாவிடம் தோற்றதால், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பை ஆர்வமாகப் பார்த்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களின் மோசமான ஆட்டத்தால் ஆத்திரமடைந்து திரைகளை கிழித்தும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தினர். பல வீடுகளில் டிவி பெட்டிகள் உடைந்து நொறுங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.