உலக கோப்பையில் பாதுகாப்பும், சூதாட்டமும் சவாலானது

உலக கோப்பையில் பாதுகாப்பும், சூதாட்டமும் சவாலானது

2015_Cricket_World_Cup_Logo.svg

பிப்ரவரி 5, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டியில் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாகும்.

முந்தைய போட்டிகளை விட இந்த போட்டிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பரிசுத் தொகைக்கு அடுத்தபடியாக பாதுகாப்புக்கு அதிகம் செலவிடப்படுகிறது.

அடுத்த சவாலான விஷயம் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் போன்ற சூதாட்டங்களாகும். இதனை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ஐ.சி.சி. மேற்கொண்டு இருக்கிறது’ என்று தெரிவித்தார்.