பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்: 5 பேர் பலி

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்: 5 பேர் பலி

photo_verybig

ஜனவரி 27, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேரா முராத் ஜமாலியில் உள்ள சத்தார் மலைப்பகுதியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அப்போது ரோட்டில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடி வெடித்து சிதறியது.

அதில் வாகனம் தூள் தூளாக நொறுங்கியது. இச்சம்பவத்தில் 4 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இவர்கள் தவிர ஒருவர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலுக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இந்த நிலையில் பலுசிஸ்தான் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 50 ஆயிரம் ரவுண்டு துப்பாக்கி, குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.