திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை: திரிஷா

திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை: திரிஷா

trisha-saree-stills261388394269

ஜனவரி 5, திரிஷா 2002–ல் ‘மவுனம் பேசியதே’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். 13 வருடங்களாக தொடர்ந்து கதாநாயகியாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

அஜீத் ஜோடியாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் வருகிற 29–ந்தேதி ரிலீசாகிறது. ஜெயம் ரவி, ஜோடியாக நடித்த ‘பூலோகம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ‘அப்பா டக்கர்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.

திரிஷாவும் தெலுங்கு நடிகர் ராணாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் திரிஷாவுக்கும் திடீர் நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக செய்திகள் வெளியாயின.

வருண் மணியன் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத் தலைவன்’ போன்ற படங்களை தயாரித்து உள்ளார். திரிஷாவும் வருண்மணியனும், சமீபத்தில் தனி விமானத்தில் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர். இருவருக்கும் வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறும் போது, திருமணத்துக்கு பிறகு நடிகையாக தொடர எனக்கு எண்ணம் இல்லை. ஆனாலும் சினிமாவை விட்டு விலகி செல்லமாட்டேன். சினிமா தொடர்பில்தான் இருப்பேன் என்றார்.

திரிஷா டைரக்ஷனில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவருக்கு விலங்குகள் மீது பிரியம் உண்டு. விலங்குகள் பாதுகாப்பிலும் அமைப்பிலும் பொறுப்பு வகிக்கிறார். எனவே விலங்குகளை மையப்படுத்தும் படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.