சென்னையில் விமானம் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

சென்னையில் விமானம் ரயில்கள் புறப்படுவதில் தாமதம்

airp

ஜனவரி 3, கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலையில் இருந்து கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மோசமான வானிலை நிலவுகிறது. சென்னையில் இருந்து அந்தமான்,டெல்லி, மும்பை, மதுரை, கொச்சி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டன.

மஸ்கட், அபுதாபி செல்லும் விமானங்கள் காலதாமதமாக புறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சென்னைக்கு வந்த சார்ஜா, சிங்கப்பூர், துபாய் மற்றும் மதுரையில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

பனிமூட்டம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதமாக வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரை மணி நேரம் முதல் ஒருமணி நேரம் வரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாமதம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.